வாசகனின் குறிப்புகள்

குறிப்பு - 02


குடத்தனை உதயன் அண்ணா &  லதா உதயன் அக்கா ஆகியோரின் தயவினால்
தமிழ்நதி அக்காவின் #மாயக்குதிரையை நேற்றிரவு ப(பி)டித்தாயிற்று..

மொத்தம் பத்துக் கதைகள்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் அல்லது வலி எனலாம்.

#தாழம்பூ #தோற்றப்பிழை இரண்டும், தமிழ்நதி அக்கா தான் கண்ட கனவுகளை நிஜமாக்கினாரோ என்றே எண்ணவைக்கிறது. அவ்வளவு (க)வித்துவம்; உயிரோட்டம்

#நித்திலாவின்_புத்தகங்களில் வந்து ஏசிக்கொண்டிருக்கும் நித்திலாவின் அம்மாவே எனது அம்மா 😊

#மாயக்குதிரை & #கடன் ஆகியன வெளிநாடுகளில் நம்மவர் அணிந்திருக்கும் பல்வேறு முகமூடிகளில் இரண்டு மூடிகளின் குறுக்குவெட்டுத் தோற்றங்கள்

#மனக்கோலம்  #காத்திருப்பு & #மலைகள்_இடம்பெயர்ந்து_செல்வதில்லை ஆகியன ஈழத்து அவலங்களின் வெள்ளிடை மலைகள்

#கறுப்பன்_என்றொரு_பூனைக்குட்டிக்கு என் அய்யா வளர்த்த பூனைக்குட்டியின் சாயல். (உடனே பூனையைக் கூப்பிட்டுவிட்டேன் என்றால் பாருங்களென் 😊)

#மெத்தப்பெரிய_உபகாரம் இன்னொரு ரகம்;
ஒரு முதிர் தாயின் உணர்வுக்கொத்து..

ஆக மொத்தம், ஒன்றல்ல, பத்து மாயக்குதிரைகள்.

மனசின் மூலை முடுக்கெல்லாம் கடிவாளம் அறுத்து ஓடிக்கொண்டே இருக்கின்றன
இந்தக் குதிரைகள்..

00
எஸ்.சிவசேகரன்

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈழத்து நவீன கவிதைமரபின் "புதிய மாஸ்டர்" கவிஞர் கருணாகரன்

மொழியை வசப்படுத்தி அனுபவங்களை படிமப்படுத்தும் எஸ்.சிவசேகரன் கவிதைகள் -

எஸ்.சிவசேகரன் - கவிதை - அஷிராவின் மடியோடு தொலையும் காலம்