இடுகைகள்

மே, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

படிமச்சித்திரங்களை வரையும் எஸ்.சிவசேகரன் கவிதைகள் - கவிஞர் பாலமுனை பாறூக்

படம்
படிமச்சித்திரங்களை வரையும் எஸ்.சிவசேகரன் கவிதைகள் - கவிஞர் பாலமுனை பாறூக் 00 மீன் தொட்டவன் எல்லாம் அபச்சாரியாம் கோவில் குருக்கள் சொன்னார் கருவறைக்குள் இருந்து சிரித்தது மீன்களோடு உண்டு வாழ்ந்த வெண்சங்கு (தலைப்பில்லாத கவிதைகள் 2) 0 காலைப்பனி பூமித்தாயை முத்தமிட மூச்சு வாங்க ஓடி வந்து இலை ஊஞ்சல் ஆடி இளைப்பாறிக் கொண்டிருக்கும் முத்து குழந்தை  0 நிலாச்சாரல்  இந்த நிலவுக்கும் இரவுக்கும் ஒழித்து விளையாட கற்றுக் கொடுத்தவர் யார் ஒரு தரம் நிலவுக்கு பின்னால் இருளும் மறுதரம் இருளுக்கு பின்னால் நிலவும் ஒளிக்கிறதே  (குட்டி கவிதைகள்) 0 விதி செய்த சதியால்  வெள்ளையடிக்கப்பட்ட வண்ண ஓவியம் அவள் மணமாகி சிலநாளில் தன் பணியை தின்றவளாம் அயலவர் வாய்க்கு கிடைத்த அவல் எத்தனை கதவுகள் தட்டி இருப்பாள் வாசல் கதவுகளினாலேயே விரட்டப்பட்டாள் அவள்  இப்போதவள் தட்டுவதை நிறுத்தி விட்டாள் நடுராத்திரியில் அதிகமாக தட்டப்படுகிறது அவளின் கொல்லைப்புற கதவு  00 சிவசேகரன் அண்மைக்காலத்தில் புதுக்கவிதைகளாலும் குறும்பாக்களாலும் வாசகர்களை கவர்ந்த வருபவர். எழ...

எஸ்.சிவசேகரன் கவிதைகள் - 02

படம்
மீளப்பெறுதல் ## முடிவான ஒரு அந்நியத்தை மீளப்பெறுதல் அவ்வளவு எளிதல்ல அஷிரா! உடைந்த கதிரைகளைப்போல கிழிந்த தகரங்களைப்போல சிதைந்த குழாய்களைப்போல அறுந்த வயர்களைப்போல மீளத்தருதல் சாத்தியமெனில் ஒவ்வொரு ஒழுங்கைகளாக உரக்ககத்திய வார்த்தைகளை என்ன செய்ய...? ஒவ்வொரு வாசலிலும் உமிழ்ந்துவிட்ட வசைகளை என்ன செய்ய...? ஒவ்வொரு உடலிலும் சாத்திவிட்ட அடிகளை என்ன செய்ய...? கழுத்தை உரசிய வாள்கள் கொடுத்துவிட்ட பயத்தை என்ன செய்ய...? வார்த்தைகள் கதிரைகளல்ல வசைகள் தகரங்களல்ல அடிகள் குழாய்களல்ல பயம் வயர் அல்ல அவை நம் அந்நியத்துக்கான சாசனத்தின் இறுதிச்சரத்துகள் 00 ஏகலைவனின் எச்சம் ********************* துரோணரே! யுகம் சில கடந்து உம்மைக்காண வந்திருக்கிறேன் தமக்கென் சிரம்தாழ்ந்த வணக்கங்கள் எந்தைக்கும் எனக்குமான மானசீக குருவே! உம்மால் எல்லைகள் கடந்து யுகசந்தியாய் அலைந்து அலைந்து விடையொன்று கண்டு உம்மிடம் மீண்டேன்.. எந்த யுகத்திலும் வில்லுக்கு விஜயன் அல்ல. கர்ணனும் அல்ல.. துரோணனும் அல்ல.. பரசுராமனும் அல்ல.. அவன் சீடன் பீஷ்மனும் அல்ல... நான்.. நானேதான்....

எஸ்.சிவசேகரன் கவிதை- இரணை மடுவே ஏழாம் கங்கையே -

படம்
ஓ பேராறே! நீயா துயில்கிறாய்?? 00 கொட்டிய மாரியில் குதூகலித்து குமரியாய் குதித்தோடி ஈர் எட்டடி பாய்ந்து எம்நிலம் மறைத்த பேரிளங்குமரியே..! நீயா துயில்கிறாய்..? 0 காய்ச்சிய கஞ்சியை வாய் ருசிக்க முன்னர் பீச்சியடித்த உன் பெருங்கை நீரினால் மூச்செடுத்தோடவிட்டு மூர்க்கமாய் வந்து எம் நிலம் மூடிவிட்ட நீயா மூச்சடக்கித் துயில்கிறாய்..? 0 சின்னஞ்சிறுசோடு சீவனைக் கையில்கொண்டு தெருவெல்லாம் சிதறி ஓடவைத்த ஒப்பற்ற எம்நில ஓவியமே நீயா இங்கு சலனமாய் துயில்கிறாய்..? 0 இலங்கைத்தாயின் மடியில் தவழும் ஏழாம் நங்கையே..! இரணைமடுவாய் விரிந்து கிடக்கும் வடக்கின் கங்கையே..! நஞ்சையும் குஞ்சையும் நாற்புறமும் செழித்து பஞ்சமென்னும் சொல்லை பாமரர் மறக்க தஞ்சமென வந்த தவத்திரு மகளே..! சொல் நீயா நம்மை அழிக்கப் பொங்கினாய்.? 0 தென்னகம் வந்துந்தன் தேகம் தழுவிவரும் தென்றலை சுகித்திட்டு எம்மிடம் இல்லையே இந்த எழிலென்று சந்ததம் சொல்லிடும் வன்னியின் எழிலியே..! சொல் நீயா நம்மை அழிக்கப் பொங்கினாய்? 0 மூவாயிரம் ஆண்டு மூத்த எம் குடிகளின் நிறமூர்த்தமெல்லாம் நெஞ்சுக்குள் ந...

சிறந்த கவிதை வடிவமைப்பாளனின் கவிதைகள் - கவிஞர் அனாதியன்

படம்
        உ ரையாடல்கள் இல்லாமல்; சந்திப்புகள் இல்லாமல் கவிதைகளுக்கு ஊடாகவே நேசங்களை கொண்டாட முடியும் எனும் உண்மையை எனக்கு சொல்லித் தந்திருக்கிறார் கவிஞர் எஸ். சிவசேகரன். இணையங்களில் எல்லோருடைய கவிதைகளையும் படிப்பதற்குரிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை. வேலைகளும் நேரமின்மையும் பலசமயம் ரசனைகளை புசித்துக் கொள்கிறது. அந்த காரணம் தான் இவர் எழுத்துகளை என்னால் படிக்க முடியாமல் போனது என நினைக்கிறேன். எஸ்.சிவசேகரன் எனும் பெயரில் கவிதைகளை எழுதும் இவரிடம் ஒரு தீவிர வாசகனை காண்கிறேன் என்பதையும் தாண்டி ஒரு சிறந்த கவிதை வடிவமைப்பாளனைக் காண்கிறேன். இவரின் கவிதைகள் ஒவ்வொன்றும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. கவிதைகளில் அவர் கையாளும் சொல்லாடல் உத்தி தான் இந்த கட்டுரையை எழுதத் தூண்டியிருக்கிறது. இவரின் பெரும்பாலான கவிதைகளில் சமூக அக்கறை தென்படுகிறது பின்வரும் கவிதை ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வு குரலாய் எஸ் சிவசேகரனிடமிருந்து ஒலிக்கிறது 00 எங்கள் விரல்களிலிருந்து சொட்டும் இரத்தத்தை குடித்து உடல் வளர்க்கும் இரண்டுகால் அட்டைகளே! கொழுந்து கொய்யும் கைவிரல்கள் ஒரு நாள் உங...

எஸ்.சிவசேகரன் கவிதைகள்

படம்
துயிலாரில்லங்களில் வழியும் கண்ணீர் 0 சரித்திரத்தால் சலவை செய்யப்பட்டு சத்திரியராக்கப்பட்ட சாமானியர்களின் கனவுகள் கானலாகிப்போன தேசத்தின் காதுகளில் மீண்டும் திணிக்கப்படுகிறது ஒரு சுதந்திர கீதம்... 0 திரும்பும் திசையெங்கிலும் துகிலுரியப்பட்டு குவிக்கப்பட்டிருக்கும் எண்ணில்லா உடல்களிலிருந்தும் வழியும் குருதியை கழுவிக் கழுவி துடைத்துக்கொண்டிருக்கிறது ஒரு பெருநேசத்தின் தீராத கண்ணீர் 0 நிமிர்ந்து ஒளிரும் ஒவ்வொரு சுடர்களிலும் மிளிர்வாய் தெரிகிறது எட்டுத்திக்கும் ஓடியலைந்து உறங்கிக்கிடந்த சத்திரியர்களின் துயில் குலைந்து சிவந்த கண்கள்...! 0 யார் கண்ணிலும் பட்டுவிடாதபடி அயற்சொற்களைப் பிரிந்து தலைகீழாய் வீழ்ந்து கிடக்கும் " தாகம் " என்ற ஒற்றைச் சொல்லின் பொருளை அறிந்த வீழாத சத்திரியர்களின் நிசப்த விம்மலின் அதிர்வில் கலங்கிக்கொண்டிருந்தன ஒவ்வொரு சுடரும்....! 00 2017 பரிசு 0 அடுக்கடுக்காய் அவனிடம் குவிந்துகிடந்தன அவளை வசப்படுத்தும் வசீயப்பரிசுகள் அவள் சொல்லும் அத்தனைக்கும் தலையாட்டி பொம்மையாய் அவன...