இடுகைகள்

நவம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிவசேகரன் - கவிதை

படம்
  // ஆஷிரா! ஒன்று இல்லையென்றானபின் நாம் ஏன் கேள்விகளோடு  அதன் பின்னலைகிறோம் "அதுவொரு நினைவுச் சுவட்டின் எச்சம் தொடர்வதே வரம்" "அதுவொரு நேசத்தின் கடைசி எத்தனம் இறுதிவரை" "அதுவொரு விசுவாசத்தின் கருணை மனு ஏற்பும் மறுப்பும் பின்னர்" "அதுவொரு பாவியின் இறுதி ஆசை அலைந்தே இறப்பது மேல்" சொல் நீ என்ன கேள்வியோடு அலைகிறாய்? 0 // 06.20 27.11.2021

விமர்சனம் - சிவசேகரன்

படம்
  ஒரு உதவாக்கரை விமர்சகனுக்கு ஒரு உதவாக்கரை கவிஞனின்  விமர்சனம் # ஈழத்து நவீன (கவிதை) எழுத்தின் போக்கு பற்றிய அண்மைய உரையாடல்கள் என்னை இதை எழுத வைத்தது. ஈழத்தில் சிலர் விமர்சனம் / மதிப்பிடல் என்கிற பெயரில் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் வல்லமை பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு நான் எழுதும் திறந்த மடல் இது. 00 உங்கள் உதவாக்கரை மதிப்பிடல்களாலதான் இன்னமும் தமிழக எழுத்து முன்னிலை பெற்றுக்கொண்டு போகிறது. இளைய தலைமுறைக்கு கூட புதிய தமிழக எழுத்தாளர்கள் தெரிந்திருக்கிறார்கள். அவர்களின் புதிய எழுத்துகள் சக, மூத்த முன்னிலை எழுத்தாளர்களால் கவனிக்கப் பட்டும், பொது வெளிகளில் அறிமுகம் செய்தும் வருவது இதற்கு காரணம். ஆனால் இங்கு, எத்தனை இளம் எழுத்தாளர்கள் மூத்த, முன்னிலை எழுத்தாளர்களால் கண்டுகொள்ளப்படுகிறார்கள்? அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்? இங்கு ஒரு கண்காட்சியில், கடைகளில் ஒரு புத்தகம் 50 பிரதி கூட விற்பனை ஆவதில்லை என பலர் அங்கலாயக்க்கிரார்கள். இங்குள்ள புத்தகக் கூடங்களில் 80 சதவிகிதம் தமிழக நூல்களே உள்ளன. இதற்கு யார் காரணம். ஒரே காரணம் உதவாக்கரை மதிப்பிடல்களும் விமர்சனங்களும். புதிய ...

பூனைக்க(வி)தை - சிவசேகரன்

படம்
 // தினமும் கோப்பை உரசும் சத்தம் கேட்டு ஓடி வந்து படியில் நின்றபடி மியாவ் மியாவ் என்று தன் வரவை சொல்லிக் கொண்டிருக்கும் பூனைக்கு எடுத்து வைத்த ஒரு சோற்றை அதன் கிண்ணத்தில் வைக்கிறாள் அஷிரா இரண்டுதரம் தின்றுவிட்டு அஷிராவை பார்த்தபடியே மீண்டும் கத்துகிரது மியாவ் மியாவ் மறைவிலிருந்து ஒடிவருகிறது இன்னொன்று காலியான கிண்ணத்தை நக்கிவிட்டு மீண்டும் கத்துகிறது வியந்தேன் வயிற்றை நிரப்பிய அஷிராவின் கருணைக்கு பூனையின் நன்றி மூன்று மியாவ் மியாவ் மியாவ் மியாவ் 00 -2021.11.08 09.30pm (எங்கள் வீட்டு பூனை)

சிவசேகரன் கவிதைகள்

படம்
  01.பரகசியமாய் போன நேசம் *************************** நேற்றைய கனவின் இடையில் உன் நலத்தை அவாவிய எனது நேசம்மீந்த விசாரிப்பை காற்றின் காதிலல்லவா சொல்லியிருக்கிறாய்..! அதோ பார் காடு மலையெல்லாம் கடந்து பரவிக்கொண்டிருக்கிறது பரகசியமாய் போன எனது நேசம்.. என்ன செய்வாய் இனி..? ஒன்றில் என்னை நீ மீண்டும் சிறையிட்டு விடு; அன்றில் என் கவிதையை தீதென்று காற்றிடமே முறையிட்டு விடு..! 00 2019 02.ஆறாகி ஓடும் முதலைகளின் கண்ணீர் ************************************* இனி எதுவும் சாத்தியமில்லை என்றான பிறகு தன்னைச் சமாதானம் செய்ய முதலைக்கண்ணீர் வடிப்பதாக முகத்தை உம்மென்று வைத்தபடியே முணுமுணுக்கிறாள் அஷிரா.. 0 ம்ம்.. இனி எதுவும் சாத்தியமில்லை குழந்தைகள் மீது பொழிந்த குண்டு மழையை.. ஏவிய எரிகணைகளை.. சபித்த சொற்களை.. கொடுத்த சித்திரவதைகளை.. பறித்த உயிர்களை எல்லாம் திரும்பப்பெறுதலும் திரும்பத்தருவதும் சாத்தியமே இல்லை.. 0 ஆனாலும் அன்றொருநாளில் கடலோடு மிதந்த உடல்களைக்கண்ட மழைக்குளத்து முதலைகள் ஓலமிட்டு அழுது  தமது கண்ணீரை ஆறாகப்பெருக்கி கடலோடு கலக்கவிட்டு உடல்களையெல்லாம் குளத்துக்குள் இழுந்து வந்து ஏப்பம் வி...

சிவசேகரன் - கவிதை

படம்
  அம்மாவின் மழை # எப்போதும் எங்களில் கனிந்துருகும் அம்மா மாரியில் மட்டும் எரிந்து விழுந்தும் தன்னளவில் யார் யாரையோ வசை பாடியும் அங்குமிங்கும் அசைந்து கொண்டே இருப்பாள் ஒழுக்குக்கு சட்டியை வைத்தபடி ஒரு வசையையும் இன்னொரு வசை சொல்லிக்கொண்டு கொட்டிலில் இருந்து அரை நனையல் விறகையும் அடுத்த வசையில் தன் விதியையும் கடைசியில் எங்களையும் வசைப்பாடுவாள் மழை முடியும் வரை வசைகளையும் தலையில் போட்ட சொப்பின் பையையும் அம்மா விடுவதில்லை ஒவ்வொரு மாரியிலும் அம்மா ஒன்றையே சொல்லிக் கொண்டிருப்பாள் இந்த மழை ஒரு சனியன் ஒரு கொடுமாரிக்குளிரில் அம்மாவின் அசைவு நின்றபோது நாங்கள் எல்லோரும் முதலும் கடைசியுமாய் வாசைபாடிக்கொண்டே நனைந்தோம் மழையில்.. இதோ இந்த மாரியில் கொட்டித்தீர்க்கும் மழையையும் அம்மா வீட்டில் எங்கோ இருந்து வசைபாடிக்கொண்டே இருக்கிறாள் 00 10.00pm

கவிதை - சிவசேகரன்

படம்
கடவுளர்கள் பூமிக்கு ஒருவர் பின் ஒருவராக வருகிறார்கள் வசிக்கிறார்கள் வளர்கிறார்கள் கொடுக்கிறார்கள் ஒருவர் பின் ஒருவராக வருகிறார்கள் வணங்குகிறார்கள் வாங்குகிறார்கள் வளர்கிறார்கள் மனிதர்கள் அதோ  இன்னொரு கடவுள்  இறங்கி வருகிறார் இன்னொரு ரூபத்தில் அவரின் முன்னால் இன்னொரு வரிசை  வருகிறது வளர்கிறது 00 06.00pm

கவிதை - சிவசேகரன்

படம்
  // காலத்தின் கரங்களில் இரண்டு கிண்ணங்கள் ஒன்றில் கருணை ரசம் மற்றொன்றில் துரோக மது கருணை கிட்டாதவர்கள் நேசத்திலிருந்து பிரிகிறார்கள் புன்னகையோடு கருணையுள்ளவர்கள் தங்கள் துரோகிகளை ஞாபங்களால் தண்டிக்கிறார்கள் தீரா ஞாபக வலியுடன் காலத்திடம் சரணடைகிறார்கள் துரோகிகள் அவர்களின் முன்னால் நீள்கிறது காலத்தின் நெடுகரங்கள் 00 10.30pm

சிவசேகரன் கவிதைகள்

படம்
// 1 விடுதலையென்பதும் வாழ்தலென்பதும் விதியிலா முடிவிலா? பெ ருமழையும் மெல்லிசையும் புத்தகங்களும் ஒரு நாயும் சில முத்தங்களுமே உனது விடுதலை வாழ்வின் திறவுகோல்களெனின் உனது வாழ்தலென்பது என்ன? மறவாதே கூண்டுப்பறவைகள் பறப்பதற்கு  இன்னும் காலம் இருக்கிறது கூடற்ற பறவைகளுக்கு காலமே பறப்பதற்கென்று இருக்கிறது 0000 2 ஒரு காலத்தின் சாட்சியெனப்படுபவன் பேச வரும்போது அறையை நிரப்புகிறது சலனம் ஒரு வணக்கம் சொல்லிவிட்டு அவன் உதிர்க்கும் அடுத்த வார்த்தைகள் ஒவ்வொன்றையும் முறித்து முறித்து அனுப்புகிறது மழையின் இரைச்சல் கனவு பிரிவு தோல்வி வலி வன்மம் காயம் யாவையும் காலம் தவறாமல் பேசிமுடித்து  அமரும்போதுதான் கவனித்தேன் அவன் தலையில் சூடியிருந்தான் காலக்கிரீடத்தை..  000 3 நீ கடைசியாக ஒருமுறை என்னைக் கேட்டிருக்கலாம் அல்லது நமது ஒரு பயணத்தையாவது எனக்கு நினைவுபடுத்தியிருக்கலாம் இல்லை செத்துவிடுவேன் என்றாவது பொய் சொல்லி இருக்கலாம் அப்போதெனும் கருணை அவஸ்தையிலிருந்து நீயும் தனித்த இருளிருந்து நானும் விடை பெற்றிருக்கலாம் 000 4 நான் ஏன் மீண்டும் மீண்டும் உன்னையே  காதலிக்கிறேன் கைவிடுகிறேன் அழவைக்கிறேன் ந...