சிவசேகரன் - கவிதை
//
ஆஷிரா!
ஒன்று
இல்லையென்றானபின்
நாம் ஏன்
கேள்விகளோடு
அதன் பின்னலைகிறோம்
"அதுவொரு
நினைவுச் சுவட்டின் எச்சம்
தொடர்வதே வரம்"
"அதுவொரு
நேசத்தின் கடைசி எத்தனம்
இறுதிவரை"
"அதுவொரு
விசுவாசத்தின் கருணை மனு
ஏற்பும் மறுப்பும் பின்னர்"
"அதுவொரு
பாவியின் இறுதி ஆசை
அலைந்தே இறப்பது மேல்"
சொல்
நீ என்ன கேள்வியோடு அலைகிறாய்?
0
//
06.20
27.11.2021
கருத்துகள்
கருத்துரையிடுக